என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மே 1-ந் தேதி கிராம சபை கூட்டம் - கொம்யூன் பஞ்சாயத்து அறிவிப்பு
- பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும்
- வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளிலும் காலை 10 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.மேலும், அரசால் பல்வேறு துறைகளில் மூல மாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து ரைக்கவும், பொதுமக்க ளுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும், இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






