search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
    X

    ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

    • விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • ரெயிலில், 38 பயணிகளும், 4 ரெயில்வே ஊழியர்களும் பயணித்தனர்.

    வடக்கு ஜெர்மனியில் உள்ள நியூஸ்டாட் நகரின் வெளிப்புறத்தில் ஆம் ருபென்பெர்க் அருகே நேற்று அதிகாலை ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது அந்த வழியாக வந்த ரெயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த 22 வயது கார் ஓட்டி வந்தவரும், 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் அந்த ரெயிலில், 38 பயணிகளும், 4 ரெயில்வே ஊழியர்களும் பயணித்தனர். இந்த கோர விபத்தில் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×