search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கையில் மக்கள் போராட்டம்- பிரதமர் அலுவலகம் மூடல்
    X

    இலங்கையில் மக்கள் போராட்டம்- பிரதமர் அலுவலகம் மூடல்

    • பிரதமர் ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில் இருந்து விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

    இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    Next Story
    ×