search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு- கொழும்புவில் எதிர்கட்சிகள் பிரமாண்ட போராட்டம்
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு- கொழும்புவில் எதிர்கட்சிகள் பிரமாண்ட போராட்டம்

    • போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர்.
    • எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.

    தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் உணவு பொருள், எரிபொருள், சமையல் கியாஸ், மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

    இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில்விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு கடனில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நிதிபெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.எனினும் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவிவருவதால் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.

    எதிர்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆயிரகணக்கான தொண்டர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

    எனினும் போலீஸ் தடையை மீறி கொழும்புவில் பேரணியாக சென்றனர். அப்போது எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

    இதில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×