என் மலர்tooltip icon

    உலகம்

    பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடியது ஸ்வீடன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடியது ஸ்வீடன்

    • பாகிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை காலவரையின்றி மூடுவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது.
    • ஸ்வீடனில் நடந்த குரான் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இம்முடிவை அரசு எடுத்திருப்பதாக பலர் நம்புகின்றனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகம் பாதுகாப்பு காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. புலம்பெயர் பிரிவில் தற்போது எந்த விதமான கோரிக்கைகளையும் கையாள முடியாது என தூதரகத்தின் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் ஸ்வீடனில் நடந்த குரான் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக பலர் நம்புகின்றனர்.

    ஸ்வீடனைச் சேர்ந்த வலதுசாரி தீவிரவாதி ஜனவரி 21 அன்று ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்தில் போலீசார் முன்னிலையில் குரான் நகலை எரித்தான். இது உலகெங்கும் கடும் கண்டனத்தைப் பெற்றது.

    இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    ஏற்கனவே, மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாகிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தின் ஒரு பகுதியை கடந்த பிப்ரவரியில் சீனா தற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×