என் மலர்
உலகம்

இஸ்லாமாபாத்தில் இந்திய தூதர்களின் வீடுகளுக்கு தண்ணீர் மட்டும் கியாஸ் சப்ளயை நிறுத்திய பாகிஸ்தான்..
- அவர்களின் அலுவலகங்களிலும், வசிக்கும் வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- , எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பிரதிநிதிகளுக்கு தண்ணீர் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் இந்திய தூதர்கள் மீதான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களின் அலுவலகங்களிலும், அவர்கள் வசிக்கும் வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தகவலின்படி, ஜூன் மாதம் முதல் இந்திய தூதர்களின் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் தூதர்களுக்கு செய்தித்தாள்களை வழங்குவதையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
இதற்கிடையில், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story






