என் மலர்tooltip icon

    உலகம்

    இம்ரான்கானுக்கு முன் ஜாமீனை நீட்டித்தது இஸ்லாமாபாத் ஐகோர்ட்
    X

    இம்ரான்கான்

    இம்ரான்கானுக்கு முன் ஜாமீனை நீட்டித்தது இஸ்லாமாபாத் ஐகோர்ட்

    • இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
    • இம்ரான்கானுக்கு செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான், போலீஸ் உயர் அதிகாரிகளையும், நீதிபதியையும் மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, இம்ரான்கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் ஜாமீன் வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் இன்றுடன் நிறைவடைவதால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை நீட்டித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×