என் மலர்
உலகம்

லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
- உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.
Live Updates
- 25 Jun 2022 6:26 PM IST
ரஷியா தனது நட்பு நாடான பெலாரசை போருக்கு இழுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், கீவ் அருகே எல்லைப் பகுதியைத் தாக்கிய ஏவுகணைகள் பெலாரஸ் பகுதியில் இருந்து வந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. பெலாரஸ் பிரதேசத்தில் இருந்து 20 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், சனிக்கிழமை காலை 5 மணியளவில் வடக்கு செர்னிகிவ் பிராந்தியத்தில் உள்ள டெஸ்னா கிராமத்தை குறிவைத்ததாகவும் உக்ரைனின் வடக்கு ராணுவ பிரிவு, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
- 25 Jun 2022 6:21 PM IST
உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் போரிட்டு வந்த போலந்து வீரர்களில் 80 பேரை ரஷியா கொன்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 25 Jun 2022 6:20 PM IST
லுகான்ஸ்க் பிராந்தியத்தின் இரட்டை நகரங்களான சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் சிலிசான்ஸ்கில் ரஷிய படைகள் பீரங்கி மற்றும் விமான தாக்குதல்களை நடத்தி பெரும்பகுதியை அழித்துவிட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலையையும் தாக்கி உள்ளதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- 25 Jun 2022 1:46 PM IST
அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஜெர்மன் சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி அன்னலேனா பயர்போக்கை சந்தித்தார். அப்போது வெளியிட்ட கூட்டறிக்கையில், உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரினால் மேலும் 40 அல்லது 50 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணம் அல்ல என தெரிவித்தார். மேலும், உக்ரைனுடனான போர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகவே ரஷியா தானியங்களை ஏற்றுமதி செய்ய மறுத்தது எனவும் குறிப்பிட்டார்.
- 25 Jun 2022 9:26 AM IST
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போதும் சுமார் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,500 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 4 பீரங்கி ராக்கெட் அமைப்புகள், 18 ராணுவ வாகனங்கள், 1,200 கையெறி குண்டு லாஞ்சர்கள், 2 ஆயிரம் துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும். இதற்காக அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
- 25 Jun 2022 6:48 AM IST
உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் தொழில் நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் ரஷிய படைகள் பெரும்பகுதியை இடிந்து தரைமட்டமாக்கியுள்ளது. இந்த பகுதியில் ரஷிய படைகளை எதிர்த்து போரிட்ட உக்ரைன் வீரர்கள், பின்னர் பின்வாங்கினர்.அந்த நகரில் உள்ள அசோட் ரசாயனத் தொழிற்சாலையின் நிலத்தடி கட்டமைப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடிமக்கள் தஞ்சம் அடைந்தனர்.
- 25 Jun 2022 6:32 AM IST
G-20 மாநாட்டில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்பிற்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். பெர்லினில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சந்திப்பு குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும், காத்திருங்கள் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஜி-7 மற்றும் நேட்டோ உச்சி மாநாட்டில் ரஷியா மீது கூடுதல் தடைகளை விதிப்பது குறித்த திட்டங்களை அமெரிக்கா முன்வைக்க உள்ளதாகவும், இது உக்ரைன் மீதான எங்கள் ஆதரவை கூட்டாக நிரூபிக்கும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- 25 Jun 2022 6:24 AM IST
செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் நடத்தி வரும் கடும் தாக்குதல்களால், உக்ரைன் ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் டான்பாஸில் ரஷியா நடத்திய பீரங்கித் தாக்குதல்களால் உள்கட்டமைப்புகள் மற்றும் வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
- 24 Jun 2022 10:30 PM IST
உக்ரைன் படைகள் செவரோடோனெட்ஸ்க் நகரில் இருந்து பின்வாங்கத் தொடங்கின. தங்களைத் தாங்களே சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலையில் படைகளை நிறுத்திக் கொள்வதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- 24 Jun 2022 10:13 PM IST
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடைகள், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜெர்மனி அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். அதிக பணவீக்கம் மேற்கு நாடுகளை விட ரஷிய பொருளாதாரத்தை வலுவாக பாதித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.






