search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி
    X

    அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி

    • அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • துப்பாக்கி சூடு காரணமாக அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. அதை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய டெக்சாசில் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது.

    மத்திய டெக்சாசில் உள்ள மெரிக்கோரில் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சத்தங்களை கேட்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    ஒரு பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அந்த வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

    இந்த துப்பாக்கி சூடு காரணமாக அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன.

    Next Story
    ×