என் மலர்
செய்திகள்

பாரிஸ் அருகே கத்தி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
பாரிஸ் அருகே மர்ம நபர் நடத்திய கத்தி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். #KnifeAttack #ParisAttack
பாரிஸ்:

இதற்கிடையே கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #KnifeAttack #ParisAttack
பிரான்சில் அதிகரித்து வரும் கத்திக்குத்து தாக்குதல்கள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளன. திடீரென பொதுவெளியில் கத்தியுடன் வலம் வரும் மர்ம ஆசாமிகள், தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள். சில சமயம் போலீசில் சிக்கிவிடுகிறார்கள்.
கடந்த ஆண்டு பாரிஸ் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமைடைந்தனர். இதில் ஒருசில சம்பவங்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாரிசில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர், பொதுமக்களை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 2 பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #KnifeAttack #ParisAttack
Next Story






