மேற்கு கரையில் கத்திக்குத்து தாக்குதல்: இஸ்ரேலைச் சேரந்த ஒருவர் கொலை- 3 பேர் காயம்

மேற்கு கரையின் முக்கிய சந்திப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கு கரையில் கத்திக்குத்து தாக்குதல்: இஸ்ரேலைச் சேரந்த ஒருவர் கொலை- 3 பேர் காயம்
Published on

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை சந்திப்பில் வாகத்தை மறித்து, அதில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியதில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் அவசர மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெருசலேமின் தெற்குப் பதியில் பரபரப்பாக இயங்கும் சந்திப்பில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

வாகனத்தில் சென்றவர்கள் மீது 3 பயங்கரவாதிகள் தாக்குதால் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com