என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பத்தூரில் இலங்கை முன்னாள் மந்திரி இல்ல திருமண விழா- பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து
- இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருப்பத்தூர்:
மறைந்த இலங்கை முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.எம்.ஆறுமுகம் தொண்டைமான்-ராஜலட்சுமி தம்பதியினரின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டமானுக்கும் திருப்பத்தூர் பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ராமேஸ்வரன்-பிரியா தம்பதியின் மகள் சீதை ஸ்ரீ நாச்சியாருக்கும் திருமணம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் மற்றும் இலங்கை உவாமா கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டைமான், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் சமூக அமைப்பு நிர்வாகிகள் என பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.






