என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக 11-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் வைகோ பங்கேற்பு
- தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரங்களை ம.தி.மு.க. அறிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக்கோரி இந்த கூட்டணி சார்பில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரங்களை ம.தி.மு.க. அறிவித்து உள்ளது. அதன்படி சென்னையில் வருகிற 11-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆடிட்டர் அர்ஜுனராஜ், கடலூரில் செந்திலதிபன், திருச்சியில் துரை வைகோ, திருவள்ளூரில் வழக்கறிஞர் அந்திரி தாஸ், செங்கல்பட்டில் ஜீவன், காஞ்சீபுரத்தில் மல்லிகா தயாளன் கலந்து கொள்கிறார்கள்.






