என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி மலர் கண்காட்சி 15-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஊட்டி மலர் கண்காட்சி 15-ந்தேதி தொடங்குகிறது

    • இ-பாஸ் நடைமுறையால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி(சனிக்கிழமை) கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை முதல் 11-ந் தேதி வரை ரோஜா கண்காட்சியும், கூடலூரில் நாளை முதல் 11-ந் தேதி வரை வாசனை திரவிய கண்காட்சியும் நடக்கிறது.

    23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும், முதல் முறையாக 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சியும் நடக்க உள்ளது.

    கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி ஒருநாள் முன்னதாகவே அதாவது வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்க உள்ளதாகவும், 6 நாள் நடத்த திட்டமிட்ட இருந்த நிலையில் கண்காட்சி தற்போது 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது:-

    இ-பாஸ் நடைமுறையால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட மலர் கண்காட்சி தற்போது 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

    நீலகிரி மாவட்டத்திற்கு 12 மீட்டர் அதிகமுள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×