என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 111.60 அடியை எட்டியது
- அணைக்கு வினாடிக்கு 2878 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 111.60 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 2878 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story






