என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்வு
- நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது.
- அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,683 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 108 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story






