என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
- தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
மேட்டூர்:
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3619 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
Next Story