என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கேரளா பறவைக் காய்ச்சல் எதிரொலி- தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு
    X

    கேரளா பறவைக் காய்ச்சல் எதிரொலி- தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு

    • கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்க உத்தரவு.
    • கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன.

    இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை மொத்தமாக அழிக்க கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கவும், கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசிக்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுசுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×