என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'டிட்வா' புயல்... இன்று 7 மாவட்டங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு
- சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
- திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
சென்னை:
'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும் நெல்லை, குமரியிலும் நாளை தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும். குறைந்த பட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.






