என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிமுக இப்போது அபகரிப்பு திமுக-வாக மாறியுள்ளது: மதுரையில் ஓ. பன்னீர் செல்வம் பேச்சு
- தாய்க்கழகமான திமுக-வில் தாயுள்ளத்தோடு இணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
- 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கொள்கைக்கு நேர்மையாக, மனசாட்சியுடன் பணியாற்றினேன்.
முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா மதுரை திருமங்கலத்தில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஓ. பன்னீர் செல்வம் பேசும்போது கூறியதாவது:-
* தாய்க்கழகமான திமுக-வில் தாயுள்ளத்தோடு இணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
* 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கொள்கைக்கு நேர்மையாக, மனசாட்சியுடன் பணியாற்றினேன்.
* கட்சி நலனை கருத்தில் கொண்டு என் கடமையை ஆற்றி வந்தேன்.
* அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறியுள்ளது.
* அண்ணா தந்த சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
Next Story






