search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரும்பாக்கத்தில் மது குடித்த இளம்பெண் உயிரிழப்பு
    X

    பெரும்பாக்கத்தில் மது குடித்த இளம்பெண் உயிரிழப்பு

    • சுபத்ரா முதல் கணவனை பிரிந்து பார்த்திபனை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
    • போலீசார் சுபத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேளச்சேரி:

    பெரும்பாக்கம், எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பு 6-வது பிளாக்கை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுபத்ரா (வயது32).

    இவர் முதல் கணவனை பிரிந்து பார்த்திபனை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சுபத்ராவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. நேற்று மாலை சுபத்ரா அதிக மதுபோதையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக அவரை மீட்டு செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே சுபத்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சுபத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுபத்ரா அதிக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×