search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மூதாட்டியை கொன்று நகை கொள்ளை- போலீசார் விசாரணை
    X

    மூதாட்டியை கொன்று நகை கொள்ளை- போலீசார் விசாரணை

    • மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போளூர்:

    போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசி அம்மாள் (வயது 85). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மகன் சின்ன பையனுடன் வசித்து வந்தார். இவர்களது விவசாய நிலம் அந்தப் பகுதி ஏரிக்கரை ஓரம் உள்ளது.

    நிலத்திற்கு எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் காசியம்மாள் தினமும் இரவில் படுத்து உறங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மூதாட்டி அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அதிகாலையில் அவரது மகன் வந்து பார்த்தபோது காசி அம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×