என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் காட்டு மாடுகள் கூட்டம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கூட்டமாக வந்த காட்டெருமைகள்.

    கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் காட்டு மாடுகள் கூட்டம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

    • நீண்ட நேரம் போக்கு காட்டிய காட்டெருமைகள் அங்கும் இங்கும் உலா வந்தது.
    • காட்டு மாடுகள் புகுவதை வனத்துறையினர் கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர் பகுதியில் அடிக்கடி காட்டு மாடுகள் கூட்டமாக உலா வருவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. கொடைக்கானல் பஸ் நிலையம், 7 ரோடு பகுதி, அண்ணாசாலை, பெர்ன் ஹில் ரோடு மட்டுமல்லாமல் நகரின் முக்கிய சாலைகளிலும் பல நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டு மாடுகள் உலா வரும். இதை கண்டு சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் அச்சமடைந்து அலறியடித்து ஓடும் காட்சிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் இன்று பரபரப்பான காலை நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் மூஞ்சிக்கல் பகுதி கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் கூட்டமாக வந்தது. இதன் காரணமாக காலை நேரத்தில் அன்றாட பணிகளுக்கு செல்வோர், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகனங்களில் பயணித்தோர் என பல்வேறு தரப்பினர் சாலையை கடந்து செல்வதில் அச்சத்தில் உறைந்தனர்.

    நீண்ட நேரம் போக்கு காட்டிய காட்டெருமைகள் அங்கும் இங்கும் உலா வந்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு காட்டிய காட்டெருமைகளை நீண்ட நேரம் கழித்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் இல்லாத பகுதிக்கு விரட்டிச் சென்றனர். கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நேரத்தில் இதுபோல் முக்கிய இடங்களில் காட்டு மாடுகள் புகுவதை வனத்துறையினர் கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×