search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் நாங்கள் கூறமாட்டோம்- வானதி சீனிவாசன்
    X

    தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் நாங்கள் கூறமாட்டோம்- வானதி சீனிவாசன்

    • ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.
    • எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் வலியுறுத்தும்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமும் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் மோடியே பிரதமராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

    கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசிய தலைமை தான் செய்யும். அவர்களின் வழிகாட்டுதல் படியே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு பணிகளும் நடக்கிறது.

    ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு. தனி சித்தாந்தம் இருக்கிறது. அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.

    இப்போதைக்கு தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறது. மாநில தலைவரும் தேசிய தலைமை முடிவு செய்யும் என சொல்லி இருக்கிறார். எனவே எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் வலியுறுத்தும்.

    மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசிய தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள். எனவே தேசிய தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை நாங்கள் இது தொடர்பாக எந்த தகவலும் சொல்ல விரும்பவில்லை

    கூட்டணி விஷயங்களை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.

    நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசிய தலைமை தான் வழிநடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×