search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் இருந்து கேரளா செல்லும் வாடாமல்லி
    X

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் இருந்து கேரளா செல்லும் வாடாமல்லி

    • இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது.
    • திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணாவணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது. 40 டன் பூக்கள் வந்தநிலையில் வாடாமல்லி மட்டும் 30 டன் வந்துள்ளது. கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கேரள மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு விருந்தினர்களை வரவேற்பார்கள். இதற்காக 9 நாட்கள் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதில் வாடாமல்லி பூ முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்று திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது. இருந்தபோதும் அதிகளவு பூக்கள் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மல்லிகை ஒரு கிலோ ரூ.600, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.200, செண்டுமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.150, ரோஸ் ரூ.150 என்ற விலையில் விற்பனையானது.

    அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×