என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகிரி கிருஷ்ணர் கோவிலில் 2½ அடி உயர பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு
- தென்காசி மாவட்டம் சிவகிரியில் கிருஷ்ணர் கோவில் உள்ளது.
- தென்னங்கன்று வைப்பதற்காக குழிதோண்டியபோது பஞ்லோக சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரியில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தென்னங்கன்றுகள் வைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது நடராஜர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலை 52 கிலோ எடையும், 2½ அடி உயரத்தில் பஞ்சலோக சிலையாகும்.
இதுகுறித்து சிவகிரி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தாசில்தார் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தென்னங்கன்று வைப்பதற்காக குழிதோண்டியபோது பஞ்லோக சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






