search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுனாமி நினைவு தினம்- கடலூர் கடற்கரை பகுதியில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி

    • கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
    • கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    கடலூர்:

    கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர்.

    இதன் நினைவு தினம் மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.

    இன்று சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர்.

    பின்னர் கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பலர் தாங்கள் கொண்டுவந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்தபடி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டுவந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து பெண்கள் இறந்த குடும்பத்தினரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே கடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் பலர் இதனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

    கடந்த 18 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கி கடற்கரைப் பகுதிகள் அன்று எப்படி இருந்ததோ அதே போல் இன்றும் கடற்கரைப் பகுதியில் அழுகை மற்றும் அலறல் குரல் நிலைத்திருந்தது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.





    Next Story
    ×