search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியது
    X

    நெல்லையில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியது

    • நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் கே.டி.சி.நகர் வழியாக 4 வழிச்சாலைக்கு செல்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது.

    குறிப்பாக மாநகர பகுதியில் பெருமழையால் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 3-வது நாளாக விடுமுறை நீடிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்த நிலையில், நேற்று பெரும்பாலான தெருக்களில் வெள்ளம் முற்றிலுமாக குறைந்தது.

    டவுனில் சந்தி பிள்ளையார் முக்கு பகுதியில் இருந்து காட்சி மண்டபம் வரையிலும் தேங்கி கிடந்த மழைநீர் நேற்று மாலை முற்றிலும் வற்றியது. டவுன் கருப்பந்துறை அருகே மேலப்பாளையத்தையும், டவுனையும் இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்காக அமைந்திருந்த மேலநத்தம் தரைப்பாலம் கனமழை வெள்ளத்தால் முற்றிலுமாக உருக்குலைந்தது.

    பழையபேட்டை, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச் பகுதி, ரத வீதிகள், சந்திப்பு மீனாட்சி புரம், சி.என்.கிராமம், வரதராஜ பெருமாள் கோவில் பகுதி, வண்ணார்சுமார் 4 நாட்களுக்கு பிறகு நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.பேட்டை, முருகன்குறிச்சி, பெருமாள்புரம், கே.டி.சி.நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய வெள்ளம் முழுமையாக வடிந்துவிட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது. மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டன.

    அதேபோல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களான வீட்டு பத்திரம், ஆதார், பான், வங்கி புத்தகம், பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ்கள், புத்தகங்கள் உள்ளிட்டவைகளும் முற்றிலும் நாசமாகிவிட்டது. சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும், அதன் உள்புறத்திலும் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் அங்கு அமைந்துள்ள தரைத்தள கடைகள் முழுவதும் முற்றிலும் நாசமாகின. சந்திப்பு ம.தி.தா பள்ளியில் வெள்ளம் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

    நேற்று சந்திப்பு பஸ் நிலையத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்தது. மேற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. த.மு. சாலையில் தொடங்கி மதுரை சாலை உடையார்பட்டி வரையிலும் இன்றும் 4-வது நாளாக இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.

    சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் உள்ள மருந்து கடைகள், எலக்ட்ரிக், பேக்கரி, எலக்ட்ரானிக்ஸ், பிளம்பிங், செல்போன், கண் கண்ணாடி, புத்தக கடைகள், ஸ்டூடியோக்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் என சுமார் ஆயிரம் கடைகளில் மழை வெள்ளமானது புகுந்தது. இதனால் இந்த கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் நாசமாகியது. சுற்றிலும் சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இவ்வாறாக சந்திப்பு பகுதியில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இங்கு பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் நெருக்கடிக்கும் இடையே வாடகைக்கு கடைகள் வாங்கி நடத்தி வந்த நிலையில் மழை வெள்ளம் அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    இன்னும் ஒருசில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்டவை வரும் நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 2 மாதம் தேவைப்படும் என கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

    சுமார் 4 நாட்களுக்கு பிறகு நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அதிகாலையில் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்கள் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இதேபோல் இறைச்சி கடைகள், பாலகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு பிறகு நடை மேடை, தண்டவாளங்களில் தேங்கி கிடந்த மழைநீர் முழுமையாக வடிந்தது. எனவே நேற்று மாலையில் யார்டு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மீண்டும் ரெயில்கள் ஓட தொடங்கின. அதேபோல் பார்சல் சர்வீஸ், தபால் சேவைகளும் தொடங்கின.

    இன்று மாலை நெல்லையில் இருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இயக்கப்பட உள்ளது. செங்கோட்டை-நெல்லை இடையே பயணிகள் ரெயில் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியது. தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம், பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இன்று முதல் இயங்குகிறது. தூத்துக்குடிக்கு ரெயில்கள் இயங்கவில்லை. அதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பால் திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை.

    இதேபோல் நேற்று வரை தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு பொது போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை முதல் தென்காசிக்கு பஸ்கள் இயங்கின. அதே நேரத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்ற பஸ்கள் டவுன் ஆர்ச், மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று சங்கரன்கோவில் சென்றது. வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த பைபாசில் உடையார்பட்டி பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் கே.டி.சி.நகர் வழியாக 4 வழிச்சாலைக்கு செல்கிறது. அதே நேரத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு பஸ்கள் இயக்கம் 4-வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் ஆம்னி பஸ்கள், கனரக லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தேங்கி கிடந்த வெள்ள நீர் வடிந்துவிட்டது. அதே நேரத்தில் அந்த வழியாக செல்லும் அண்ணா சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×