search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழப்பு
    X

    ரெயில் மோதி இறந்த பெண் யானையை காணலாம்.

    கோவை அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழப்பு

    • கேரள மாநிலம் வாளையார்-கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்திற்கு 17 யானைகள் வந்தது.
    • ரெயில் அதிவேகமாக இயக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கோவை வழியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக ரெயில் பாதை செல்கிறது. இதனால் தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரெயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான வாளையாறு அருகே ரெயில் மோதியது 3 யானைகள் உயிரிழந்தது. இதனையடுத்து யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் ரெயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் வாளையார்-கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 17 யானைகள் வந்தது. இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த யானை கூட்டம் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது.

    அப்போது அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது கண்இமைக்கும் நேரத்தில் ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது.

    இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கும் வனத்துறையினருக்கும் ரெயில் என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று பெண் யானை ரெயில் மோதி இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ரெயில் அதிவேகமாக இயக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ரெயில்கள் மோதி யானைகள் உயிரிழந்து வருவது சூழலில் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×