என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
    X

    கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

    • கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
    • பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தொடர் மழையால் கோவை குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

    Next Story
    ×