search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூர் அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
    X

    திருவாரூர் அருகே போலி மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

    • விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • மது பாட்டில்கள் மற்றும் 2 கார், லாரி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ராணுவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் எக்பர்ட். இவர் மீது திருட்டு மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவரிடம் விளாகம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வெளிமாநில மது பாட்டில்கள் வாங்கி வந்து அதில் தமிழ்நாடு அரசின் மதுபான ஸ்டிக்கரை போலியாக ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவாரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் முடிவில் ராணுவ நகரில் தங்கியிருந்த எக்பர்ட் மற்றும் தினேஷ் ஆகியோரிடமிருந்து 618 போலீ ஸ்டிக்கர் ஓட்டிய மது பாட்டில்கள் மற்றும் 2 கார், லாரி, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ், கலையரசன், சுதா, கலையரசி, தருணாச்சா உள்பட 6 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×