search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி முருகன் கோவில் ரூ.64 லட்சம் உண்டியல் வசூல்
    X

    திருத்தணி முருகன் கோவில் ரூ.64 லட்சம் உண்டியல் வசூல்

    • கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
    • கோவில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணைஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, சுரேஷ்பாபு, நாகன், கோ. மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மொத்தம் ரூ.64 லட்சத்து 90 ஆயிரத்து 989 ரொக்கம் மற்றும் 161 கிராம் தங்கம், 4கிலோ வெள்ளி காணிக்கையாக இருந்தது. இது கடந்த 19 நாட்களில் மட்டும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்று திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×