என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்
- துளசி, இது குறித்து கடந்த 7 -ந்தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- துளசி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் சதீஷ் குமாரின் வீட்டின் மூன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் துளசி(29). இவர் உறவினரான சதீஷ்குமார் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்த கொள்வதாக கூறி சதீஷ்குமார் நெருக்கமாக பழகிவந்தார்.
கடந்த 4-ந் தேதி என்னை குடும்பத்தினரின் அனுமதியுடன் பதிவுத்திருமணம் செய்வதாக சதீஷ்குமார் கூறி இருந்தார். இதற்கிடையே அவர் திடீரென தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி துளசி சதீஷ் குமாரின் வீட்டிற்கு சென்று கேட்ட போது 50 சவரன் நகை மற்றும் கார் கொடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடையந்த துளசி, இது குறித்து கடந்த 7 -ந்தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த துளசி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் சதீஷ் குமாரின் வீட்டின் மூன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்ததும் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் துளசியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து துளசி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






