search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரியையின் செருப்பை துடைக்கச் சொல்லி பள்ளி மாணவி அவமதிப்பா?
    X

    ஆசிரியையின் செருப்பை துடைக்கச் சொல்லி பள்ளி மாணவி அவமதிப்பா?

    • மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.
    • தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது.

    கோவை:

    கோவை மாவட்டம் துடியலூர் அசோகபுரம் பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் மாவட்ட முதன்மை கல்லி அதிகாரியை நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

    நான் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவள். துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில் எங்கள் பள்ளி வகுப்பு ஆசிரியை என்னிடம் அடிக்கடி மதரீதியாக விரோதம் காட்டி வருகிறார்.

    மேலும் அவர் என்னை நேரில் வரவழைத்து அவரது செருப்பை துடைக்க சொல்லி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்து விட்டேன். எனவே ஆத்திரம் அடைந்த ஆசிரியை என்னை அவதூறாக பேசி தாக்க பாய்ந்தார். மேலும் என் தந்தை செய்யும் தொழில் குறித்து அவதூறாக பேசி ஏளனம் செய்தார்.

    இது என்னை வெகுவாக பாதித்தது. மேலும் எனது கல்வித்திறனும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நான் இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியையிடம் நேரடியாக புகார் அளித்தேன். ஆனாலும் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கோவை மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் இதுதொடர்பாக நேரடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மாணவி புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது. எதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. புகாரில் குறிப்பிட்டது போன்று எந்த சம்பவங்களும் இங்கு நிகழவில்லை என்றார்.

    Next Story
    ×