search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் பரவலை தடுக்க உடுமலையில் வாகனங்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்
    X

    ஆப்ரிக்கன் பன்றிகாய்ச்சல் பரவலை தடுக்க உடுமலையில் வாகனங்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

    • பன்றி பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை உதவி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
    • பன்றிகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் பண்ணைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து உயிரிழந்தன.

    இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக- கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்து வளர்ப்புக்காகவோ இறைச்சிக்காகவோ பன்றிகள் கொண்டு வரவும் இங்கிருந்து கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பன்றி பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை உதவி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பன்றிகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் பண்ணைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்களை பண்ணைக்குள் அனுமதிக்க கூடாது. உணவக கழிவுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×