என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடுமையான பனிப் பொழிவால் ரெயில்கள் மெதுவாக சென்றன
- திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு இருந்து வந்தது.
- திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு இருந்து வந்தது. இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதில் திருவள்ளூர், கனகம்மாசத்திரம், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி என மாவட்டத்தின் உள்ள பல்வேறு பகுதிகளில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டது.
மேலும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்டவாள பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரெயில்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதனால் திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. மேலும் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






