search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    30 ஆண்டுகால போராட்டத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    30 ஆண்டுகால போராட்டத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    • விவசாயிகள் தங்கள் நிலங்களை அளித்தார்கள்.
    • விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டடத்தை அறிவித்துள்ளார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு தேவையான மூலப்பொருள்கள் அங்குள்ள விவசாய நிலங்களில் கிடைப்பதால் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை அளித்தார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் 30 ஆண்டுகளாக காலம் தாழ்த்துவது கண்டிக்கதக்கது.

    நீதிமன்றம் ஏக்கர் ஒன்றுக்கு 1.20 லட்சம் இழப்பீடும், இதுவரையான வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 8 லட்சம் வழங்க உத்திரவிட்டது. ஆனால் அதை நிறைவேற்றாமல் அரசு மேல் முறையீடு சென்றது.

    விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டடத்தை அறிவித்துள்ளார்கள். 30 ஆண்டு கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசும், அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகமும் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×