என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![செயற்கைகோள் தயாரிக்கும் திருவள்ளூர் மாணவிகள் செயற்கைகோள் தயாரிக்கும் திருவள்ளூர் மாணவிகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/17/1822737-tiruvallurstudentddd.webp)
செயற்கைகோள் தயாரிக்கும் திருவள்ளூர் மாணவிகள்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மாணவிகள் இருவரும் திருப்பாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பல்வேறு கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.
3-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 75 பேர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த குழுவில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன்-சரஸ்வதி தம்பதியின் மகள் இவாஞ்சலின், கை வண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன்- கல்யாணி தம்பதியின் மகள் அனுஜாசிவானி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள், 75-வது ஆண்டு பவள விழா சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு உருவாக்கி வரும் 75 மாணவர் செயற்கைகோளில் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பெற்று உள்ளனர்.
இதனால் மாணவிகள் இவாஞ்சலின், அனுஜா சிவானி ஆகிய இருவரும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் மிதந்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2-ந்தேதிமுதல் 5-ந்தேதி வரை பெங்களூரு இஸ்ரோ மையத்தில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசு பள்ளியில் உள்ள மாணவர்களால் "அகத்தியர்" என்ற பெயரில் செயற்கைகோள் உருவாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவிகள் இவாஞ்சிலின், அனுஜா சிவானி ஆகிேயார் கூறியதாவது:-
பெரிய விஞ்ஞானிகள் மட்டுமே வந்து செல்லக் கூடிய ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நாங்களும் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. விஞ்ஞானிகள் எங்களுக்கு வகுப்பு எடுத்தது பெரிய அனுபமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.
செயற்கைகோள் செய்யக்கூடிய மாணவியாக நாங்கள் சென்றது எங்களுக்கு பெருமிதம் ஆகும். தேர்வு செய்யப்பட்ட 75 பேருக்கும் பயிற்சி நடைபெறும். பின்னர் அவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைப்பார்கள்.
வானில் விமானத்தை வேடிக்கை பார்த்து வந்த நாங்கள் இப்போது செயற்கைகோளை தயார் செய்யப் போகிறோம் என்பதை நினைத்தால் நம்ப முடிய வில்லை.
எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், கணித ஆசிரியர் ஜெக தீஸ்வரி ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவிகள் இருவரும் திருப்பாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களில் இவாஞ்சலின் ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)