search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இறந்த மோப்பநாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போலீஸ் சூப்பிரண்டு
    X

    இறந்த மோப்பநாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போலீஸ் சூப்பிரண்டு

    • நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்பநாய்கள் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்பநாய் காவல்துறையில் இணைந்தது.

    நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்பநாய்கள் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 2 மோப்பநாய்கள் குற்றம் நடைபெற்ற இடத்தில் சோதனை நடத்தவும், 2 மோப்பநாய்கள் வெடிமருந்து சோதனை நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்பநாய் காவல்துறையில் இணைந்தது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அந்த மோப்பநாய், பட்பயர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதுவரை 96 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த அந்த மோப்பநாய், நேற்று மரணம் அடைந்தது. அதன் இறுதிச்சடங்கில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் உள்பட அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×