search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்
    X

    பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

    • பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 54 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 22 வார்டுகளிலும் பணிகள் நடை பெற்று வரும் நிலையில் அனைத்து வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பொன்னேரி தச்சூர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தாயுமான்செட்டி தெரு, ஹரிஹரன் பஜார் வீதி, என்.ஜி.ஓ. நகர், ஆகிய இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளங்களால் பொன்னேரியில் அதிக நேரம் போக்குவரத்து நெரிசல், பள்ளி கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் போக முடியாமல், தவிப்பு அடிக்கடி விபத்து, மற்றும் கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பொன்னேரி மீஞ்சூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடபடாமல் இருந்ததால் அவ்வழியாக வந்த கார் பள்ளத்தில் விழுந்தது. லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பிய நிலையில், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காரை மீட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- தெரிவித்ததாவது அடிக்கடி சாலையின் அருகே தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகனங்கள் சிக்கி தவிப்பதாகவும் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் பெயர்ந்து காணப்படுவதாகவும் பாதாள சாக்கடை திட்டப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    மேலும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு தடுப்புச் சுவர் அமைக்காததால் ஆடு மாடுகள் அதில் விழுந்துள்ளன.

    எனவும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்து வருவதாகவும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×