என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கும்- தமிழ் மகன் உசேன் பேட்டி
- தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.
- வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராகவும் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள தர்காவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், மீண்டும் தமிழக முதல்வராகவும் வர வேண்டி அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராகவும் பொறுப்பு ஏற்றுக் கொள்வார். தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை தான் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பா.ஜனதா கட்சியில் இருந்து அ.தி.மு.க வெளியேறுவதற்கான முன்னோட்டமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.






