என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு- ஷவர்மா கடை உரிமையாளரை துவைத்து தொங்க விட்ட பெண்ணின் உறவினர்கள்...
- திருமணமான பெண்ணுடன் பழக்கம் வைத்த ஷவர்மா கடை உரிமையாளரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
திருச்சி:
சேலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசி (வயது 45). திருமணமான இவர் கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் சிக்கன் ஷவர்மா கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்காக அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் சசிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அந்த பெண்ணை கரூருக்கு வரழைத்தும், சசி கொடுமுடிக்கு சென்றும் அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் கொடுமுடியில் இருந்து நேற்று கரூர் வந்தனர். பின்னர் அவர்கள் சசி நடத்திவரும் ஷவர்மான கடைக்கு சென்றனர். வாடிக்கையாளர்கள் வருவதாக நினைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் சசியை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராமல் கடையிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். அதன் பின்னர் மேற்குமாட வளாகம் தெரு வழியாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சாலையில் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் அவரை தரதரவென இழுத்துச்சென்றனர்.
இதில் சசிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.
இதனை சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
திருமணமான பெண்ணுடன் பழக்கம் வைத்த ஷவர்மா கடை உரிமையாளரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்