search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    150 வியாபாரிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை- குண்டர் சட்டம் பாயும்
    X

    150 வியாபாரிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை- "குண்டர் சட்டம் பாயும்"

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்.
    • 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.

    ராயபுரம்:

    கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வடசென்ைன பகுதியில் குட்கா, புகையிலை விற்பனை தடையை மீறி அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய வளா கத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வியாபாரி களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர வின் படி வண்ணாரப் பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலை மையில் நடைபெற்றது.

    இதில் வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை போன்ற பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை, டீக்கடை, பழ வியாபாரிகள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது போலீசார் பேசும்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.தடையை மீறி விற்பனை செய்தால் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டு, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும். மேலும் கைது நடவடிக்கை எடுக்கப் படும்.

    பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது மக்களுக்கு போலீசாரின் உதவி செல்போன் எண்கள் ஆங்காங்கே வைக்கப்படும். ஏற்கனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு தொழில் செய்யவும் அல்லது வியா பாரம் செய்ய உதவி தேவைப்பட்டால் போலீசார் சார்பில் உதவி செய்து தரப்படும் என்று தெரி வித்தனர்.

    பின்னர் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நிருபர்களிடம் கூறும்போது, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பழக்கடை போன்ற கடைக ளில் கஞ்சா, மாவா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது இதுவரை 42 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் 51 பேர் கைதாகி உள்ளனர்.

    இதில் 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கைது நடவடிக்கை யை தொடர்ந்து குண்டர் சட்டம் பாயும் என்றார்.

    Next Story
    ×