என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே 3 சுங்கச்சாவடிகள் அகற்றம்
    X

    கோப்பு படம்

    மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே 3 சுங்கச்சாவடிகள் அகற்றம்

    • 2018-ம் ஆண்டு சென்னை அக்கரை-மாமல்லபுரம் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.
    • மாமல்லபுரம்-முகையூர் இடையே 31கி.மீ. பகுதியை ரூ.675 கோடி மதிப்பில் 4 வழிப்பாதையாக மேம்படுத்த தற்போது பணிகள் நடக்கின்றன.

    மாமல்லபுரம்:

    சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சுங்க கட்டண சாவடியாக 20 ஆண்டுகளாக நிர்வகித்து பராமரித்தது.

    இந்த வழித்தடத்தில் உள்ள மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாடு காரணமாக 2018-ம் ஆண்டு சென்னை அக்கரை-மாமல்லபுரம் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.

    பாரத்மாலா பாரியோ ஜனா திட்டத்தில் மாமல்லபுரம்-முகையூர் இடையே 31கி.மீ. பகுதியை ரூ.675 கோடி மதிப்பில் 4 வழிப்பாதையாக மேம்படுத்த தற்போது பணிகள் நடக்கின்றன.

    இதையடுத்து முகையூர்-மரக்காணம் இடையே 31 கி.மீ. பகுதி ரூ.595 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் மரக்காணம்-புதுச்சேரி இடையே 45 கி.மீ. பகுதி மேம்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையின் போது கட்டண வசூல் சர்ச்சையானது. மாமல்லபுரம்-புதுச்சேரி பகுதி சுங்க கட்டணத்தை கைவிடுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியதால் சுங்க கட்டணம் வசூலிப்பது கைவிடப்பட்டது.

    சுங்க கட்டணம் கைவிடப் பட்டதையடுத்து இங்கு சுங்கச்சாவடிகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள 2 சுங்கச்சாவடிகள், வெங்கல்பாக்கத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி என மொத்தம் 3 சுங்கச்சாவடி மையங்கள் அகற்றும் பணியை சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் நேற்று தொடங்கினார்கள்.

    Next Story
    ×