என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலாண்டு தேர்வு: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 8-ந் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
    X

    காலாண்டு தேர்வு: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 8-ந் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

    • 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 6 முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும்.
    • அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பி உள்ள சுற்றறிக்கை கூறியிருப்பதாவது:-

    தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ந் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

    எனவே அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 6 முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும். இதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×