என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தாம்பரம் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் மோதி தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது
- தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ் ஆட்கள் இல்லாமல் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையோரம் இன்று அதிகாலை தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ் ஆட்கள் இல்லாமல் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ பஸ்சுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளும், பஸ்சும் கொளுந்து விட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்த வாலிபர் தீயில் சிக்காமல் உயிர்தப்பினார். அவர் பஸ் தீப்பற்றி எரிவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ் நிலையம் அருகே நடந்த தீவிபத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்