என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மதுரையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

    • சதீஷ்ராஜா தற்கொலை செய்திருப்பதால், எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவில்லை.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்ராஜா (வயது38). போலீஸ்காரரான இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சதீஷ்ராஜா நெல்லை மாவட்டம் நாங்குனேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், நேற்று இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சதீஷ்ராஜா பரிதாபமாக இறந்தார்.

    அவரது தற்கொலை குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபழக்கத்திற்கு அடிமையான சதீஷ்ராஜாவை, அதிலிருந்து விடுபட செய்ய அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற செய்தனர். ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை என தெரிகிறது.

    இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ்ராஜா தற்கொலை செய்திருப்பதால், எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவில்லை. அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×