search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளை குறி வைத்து கள்ள நோட்டை புழக்கத்தில் விடும் கும்பல்
    X

    வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளை குறி வைத்து கள்ள நோட்டை புழக்கத்தில் விடும் கும்பல்

    • மர்ம நபர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
    • போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்கள் துணிக்கடைகள், பழக்கடைகள், டீக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். அந்த இடங்களை குறி வைத்து சில மர்ம கும்பல் 500 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தியூர் பகுதிகயில் உள்ள கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு நேற்று பலர் வந்து பணம் கொடுத்து பொட்ரோல் போட்டு சென்றனர். இதை பயன்படுத்தி ஒருவர் ரூ.200 கொடுத்து பொட்ரோல் போட்டு கொண்டு சென்றார். இதையடுத்து அந்த நோட்டை ஆய்வு செய்த போது அது கள்ள நோட்டு என தெரிய வந்தது. அந்த கள்ள நோட்டு யார் கொடுத்தது என தெரிய வில்லை.

    இதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து மர்ம கும்பல் பெட்ரோல் போட்டு சென்றது தெரிய வந்தது. இப்படி அடிக்கடி வந்து மர்ம கும்பல் கள்ள நோட்டுகள் கொடுத்து ஏமாற்றி வருவதை அறிந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி அந்த நோட்டுகளை அப்புறப்படுத்த அறிவுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    அந்தியூர் பகுதியில் சில மர்ம நபர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மேலும் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வருகின்ற 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வார்கள்.

    இதனால் பணப்புழக்கம் அந்தியூர் பகுதியில்இருக்கும். இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணத்தை வாங்க வேண்டும். பணத்தை 2 புறங்களிலும் திருப்பிப் பார்த்து நல்ல நோட்டா என்பதை உருதி செய்த பிறகு பணத்தை உள்ளே வைக்க வேண்டும்.

    மேலும் விற்பனையாகும் பணததை அவ்வப்போது எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டு பணம் வைக்கும் டிராவில் குறைந்த தொகையை வைத்து பண்டிகை காலங்களில் ஏமாற்று கும்பலிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

    இதே போல் சிலர் 100 ரூபாயை கொடுத்து விட்டு 500 ரூபாய் கொடுத்தேன் என்று ரகளை செய்வார்கள். அவர்கள் வேறு ஒருவர் கொடுத்த 500 ரூபாயை தங்களுடையது என்று ஏமாற்றி பணத்தை பெற்றுச் செல்லும் கும்பல் சுற்றித் திரிவார்கள். அவர்களிடம் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள வேண்டும்

    மேலும் கடைகளில் கூட்டம் அதிக அளவில் சேர்வதை தவிர்க்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அவற்றை விரைவில் கொடுத்து அனுப்பிவிடுங்கள். பெரிய மளிகை கடைகளில் பண்டிகை காலம் முடியும் வரை கண்காணிப்பு கேமராவை பார்வையிடுவதற்கும் கண்காணிக்கவும் ஒருவரை தனியாக நியமித்து கடைகளில் திருட்டு நடைபெறாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் கள்ள நோட்டு கும்பல்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவது போல் வருவார்கள். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் பொருள் கொடுப்பதற்கு தாமதப்படுத்தி அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×