search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி எம்.பி. காரை வழிமறித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி எம்.பி. காரை வழிமறித்து முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

    இந்த கடையினால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மதுகுடித்து விட்டு சிலர் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதாலும், பெண்கள் தனியாக நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடம் குற்றம்சாட்டி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

    இந்த நிலையில் சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் வந்தார்.

    அப்போது , குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் எம்.பி.யிடம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினர்.

    அதன்பின்னர் தங்களது கோரிக்கை மனுவை எம்.பி.யிடம் பொதுமக்கள் கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக டாக்டர் செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×