search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளிக்கரணை அருகே  இறைச்சி கடை உரிமையாளர் கார் மீது  நாட்டு வெடிகுண்டு வீச்சு
    X

    பள்ளிக்கரணை அருகே இறைச்சி கடை உரிமையாளர் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

    • நாட்டு வெடி குண்டு வெடித்ததில் கார் சேதம் அடைந்து இருந்தது.
    • வெடிகுண்டு வீசி தப்பிய கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியான் பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அன்சாரி. இவர் வீட்டின் கீழ்பகுதியில் இறைச்சிகடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு அவர் தனது காரை வீட்டின் எதிரே சாலையோரத்தில் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதிகாலை ஒரு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து கார் தீப்பற்றியது.

    சத்தம் கேட்டு அன்சாரி வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாட்டு வெடி குண்டு வெடித்ததில் கார் சேதம் அடைந்து இருந்தது.

    வெடிகுண்டு வீசிய மர்மகும்பல் யார்? என்று தெரியவில்லை. தொழில் போட்டியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிகுண்டு வீசி தப்பிய கும்பல் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×